Wednesday, 15 January 2025

மகா கும்பமேளா 2025

உலகமே கொண்டாடும்...
*மஹா கும்பமேளா!* 🙏 

இதன் தனிச்சிறப்புகள் என்னென்ன?

*அமிர்தத்தை* பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது... 

பல்வேறு தெய்வீக தன்மை கொண்ட பொருட்களை தொடர்ந்து அமிர்தம் கிடைத்தது. 

அது அசுரர்களுக்கு கிடைத்து விடக் கூடாது என்பதற்காக... 
மகாவிஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து அமிர்த கலசத்தை ( *கும்பம்* ) எடுத்துச் சென்றார். 

அப்போது அமிர்தத்தின் சில துளிகள் பூமியில் சிந்தின! 

அவைகள்... 

1. *'பிரயாக்ராஜ்'* என்றழைக்கப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும்... 
 *'திரிவேணி சங்கமம்!*

2. *உஜ்ஜயினி* 

3. *ஹரித்துவார்*

4. *நாசிக்*

இதன் நினைவாக கொண்டாடப்படுவதே கும்மேளா ஆகும்.  

இந்த நான்கு இடங்களிலும் கும்பமேளா வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெற்று வருகிறது. 

இப்போது... 
திரிவேணி சங்கமத்தில் சிறப்புடன் நடந்து வருகிறது.

https://whatsapp.com/channel/0029VamfHu1IHphRGwQOQB0P 

மொத்தம் நான்கு வகையான கும்பமேளாக்கள் உள்ளன. 

1. *ஆர்த் கும்பமேளா* 
6 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுவது. 
இது ஹரித்வார் மற்றும் பிரயாக்ராஜில் நடத்தப்படும்.

2. *பூர்ண கும்பமேளா*  
 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை... 
ஹரித்வார், பிரயாக்ராஜ், நாசிக், உஜ்ஜைனி 
ஆகிய நான்கு இடங்களிலும் நடத்தப்படும்.

3. *மக் கும்பமேளா* 
இது ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும். 

இது பிரயாக்ராஜில் மட்டுமே நடத்தப்படும். 

இதை சோட்டா கும்பமேளா என்றும் சொல்லுவதுண்டு.

4. *மகா கும்பமேளா*
இது தான் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது. 

12 பூர்ண கும்பமேளாக்களுக்கு பிறகு நடத்தப்படும். 

*இது பிரயாக்ராஜில் மட்டுமே நடத்தப்படும்.*

கும்ப மேளாவின் போது கங்கையில் தலை முழுகினால்... 
*அமிர்தத்தில் மூழ்கியதற்கு சமம்!* 🙏

இது பற்றி... 

*சத்குரு :-*

இவ்வுடலில் 72 சதவிகிதத்திற்கும் மேல் நீராக இருப்பதால், 

சூரிய சுழற்சியில் ஒரு குறிப்பிட்டநேரத்தில், குறிப்பிட்ட நட்சத்திரத்தில் நாம் இருக்கும்போது, 

நம் உடலுக்கு அதிகபட்சமான பலன் கிடைக்கிறது. 

கும்பமேளாவில், 
ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் பொருத்தமான சாதனா செய்தபடி இருந்தால்... 
உடலையும் மனதின் அமைப்பையும், சக்தி நிலையையும் அதனால் மாற்றியமைக்க முடியும். 

*அனைத்திற்கும் மேலாக உங்களுக்குள் அதிகப்படியான ஆன்மீக முன்னேற்றம் நிகழும்."*
என்கிறார். 

அதிலும் இப்போது நடக்கவிருக்கும் கும்பமேளா... 

*சாதாரண திருவிழா அல்ல!*

144 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும்  கோள்களின்... 
*அற்புதமான அமைப்பு நிலையில் நடக்கிறது!* 🍁

சிவபெருமானின் மடத்து யோகிஜி, உத்திர பிரதேசத்தை ஆளும் தருணம்... 
அந்த சிவமடத்தின் மஹந்த் ஸ்ரீ விஷ்ணுவுக்கு நடத்தும் மேளா விழா இது! 

உலகின் அட்லாண்டிக், பசிபிக், ஆர்டிக் சமுத்திரங்களெல்லாம்... 

இந்து மகா சமுத்திரத்தில் சங்கமாக போகும் நிகழ்வு இந்த மஹா கும்ப மேளா!

தினமும் 90 லட்சம் பேரென்று 40 கோடி மக்கள் வரவிருக்கும் மெகா நிகழ்வு! 

ஆனால், 
முதல் நாளிலேயே ஒன்றரை கோடி பேர்கள் புனித நீராடி உள்ளனர்! 

இந்த நிகழ்வுக்கு செல்ல 
*13, 000 ரயில்கள்!*
மற்றும் 
*250 விமானங்கள்* இயங்கும்!

சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.‌‌

மக்கள் தங்குவதற்கு 
*'மஹாகும்ப நகர்'* 
என்ற புது நகரே சிருஷ்டிக்க பட்டிருக்கிறது.

நகரில்... 
*5 லட்சம் கார்கள்* 
நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

நகரை 25 பகுதிகளாக பிரித்து போக்குவரத்து வழிகள் செய்யப் பட்டிருக்கிறது.
 
24 மணி நேர மின்சாரம், 
தடையில்லா குடிநீர், 
125 ஆம்புலன்ஸ்கள், 
56 காவல் நிலையங்கள், 30, 000 காமெராக்கள்,  

மற்றும் 
நெரிசலான பகுதிகளை கண்டு ரூட் மாற்றிக் கொள்ள... 
100 *AI* பொருத்திய கணினி காமெராக்கள்,
தனி இணையதள ஆப்.  

மேலும், 
உலகெங்குமிருந்து வரும் மக்களுக்கு உதவ பன்மொழிகள் அறிந்த 100 வழிகாட்டிகள்! 
 
இவை   அனைத்தையும் கண்காணித்து மக்களுக்கு உதவ 50, 000 காவலர்கள் மற்றும் 
மருத்துவ வசதிகள்.

1954 ல் நடந்த விபத்தில் நூற்றுகணக்கானோர்  மாண்டது போல நடக்காமலிருக்க... 
ஒவ்வொரு அடியும் கண்காணிக்க பட்டு வருகிறது. 

*'ஒரே ஒரு அசம்பாவிதம்கூட நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்'*
என்பது 
 அந்த கோரக்நாத் மஹந்த்தின் கட்டளை! 

இத்துடன் எந்த நிலையையும் சமாளிக்க தேசிய பாதுகாப்பு  படையும்... 
தேசிய பேரிடர் படையும் தயார் நிலையில் திரிவேணி சங்கமத்தை சூழ்ந்துள்ளது! 
(கண்ணுக்கு தெரியாமல்...)
அதாவது, 
மக்களோடு மக்களாக... 
சாதாரண உடையில்!

பாரதம் மட்டுமல்லாமல் உலகெங்குமிருந்து வந்துள்ள புகழ் பெற்ற கலைஞர்கள், நிகழ்ச்சிகள் நடத்தி பக்தர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.  

பஜனைகள், பாடல்கள் புகழ் பெற்றவர்களால் பாடப்பட்டு பிரயாகை நகரே பக்தி கடலில் மூழ்கி கொண்டிருக்கிறது.
  
இன்னொரு பக்கம் ஓவியர்கள் 'உலக ரெகார்ட்' பண்னும் விதமாக சுவரோவியம் வரைந்துள்ளார்கள்! 

நதி கரையோரம் 12 கிலோ மீட்டருக்கு... 
ஏற்கனவே அழிந்த காடுகளை இந்த மகா கும்பமேளாவுக்காக... 
*வல்லுனர்கள் உதவியுடன் மீண்டும் உருவாக்கப் பட்டிருக்கிறது!*

இந்த கும்ப மேளா முடியும் போது... 
*குறைந்த பட்சம் 4 உலக  சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கும்!* 🎯

1. உலகின் மிகப்பெரிய மின்சார வாகனங்கள் அணி வகுப்பு 

2. உலகின் மிக பெரிய நதி சுத்திகரிப்பு! 
 
3. 8 மணி நேரத்தில் நடந்த மிகப்பெரிய கையால் செய்யப்பட்ட அச்சு வேலை! 
 
4. ஒரே நேரத்தில் நடந்த மிகப்பெரிய sweeping வேலை (10, 000 பேர்) 

இந்த சாதனைகளெல்லாம் ஒன்றுமே இல்லை என்னுமளவில் இன்னொன்றும் நடந்திருக்கும்... 

என்னவெனில், 
*சனாதனத்தை கடைபிடிக்கும் இந்துக்கள் ஒவ்வொருவரும்...* 

*வாரணாசி, அயோத்தி, பிரயாகை முழுகல் முடித்து...*
*பக்தி மழையில் நனைந்து,* 
*ஜென்ம சாபல்யமடைந்து...* *வாழ்த்தி, ஆசிர்வதித்து செல்வார்களே...* 

*அந்த 'மானசீக சக்தி' பாரதத்தை இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் கவசமாக காக்கும்!* 🙏 
 
உண்மைதானே?

ராமாயணத்தில்... 
ராமன், ராவணனுடன் யுத்தம் செய்வதை வானிலிருந்து முப்பத்து  முக்கோடி மக்களும் பார்த்தார்களாம். 

கல்கியும், சாண்டில்யனும்...
'பெரிய யுத்தங்களை, நட்சத்திரங்கள் கூட கண்கொட்டாமல் பார்த்தாக...'
எழுதி இருகிறார்கள்.

12,670 கோடி செலவு செய்து... 
2,00,000 கோடி பொருளாதார பரிவர்த்தனை நடக்கவிருக்கும் கும்பமேளாவை... 

*இந்தியா மட்டுமல்ல உலகமே இப்போது கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது!* 👍

144 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு... 

நாமும் புனித நீராடினால் நம்முடைய பாவங்கள் நீங்கி,
*மோட்சம் கிடைக்கும்* 🙏 

பிரயாக்ராஜ் செல்ல முடியாதவர்கள்... 

தங்கள் பகுதியில் உள்ள புனித நதிகள், 
திரிவேணி சங்கமங்களில் புனித நீராடி, 
*மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட பலனை பெறலாம்.* 🙏 

*எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் பெறுவோம்!* 🙏 

*ஓம் நமசிவாய* 🙏