Monday, 6 April 2026

உடல் ரகசியம்

யாரும் சொல்லாத உடல் ரகசியங்கள் — இதை தெரிஞ்சுக்கிட்டா வாழ்க்கையே மாறும்! 🧬⚡

நண்பர்களே,

டாக்டர் கிட்ட போவோம். மாத்திரை வாங்குவோம். சாப்பிடுவோம். மறுபடியும் அதே பிரச்சனை வருகிறது.

ஏன் தெரியுமா?

நாம் அறிகுறியை சரிசெய்கிறோம். காரணத்தை சரிசெய்வதில்லை! 😔

இதோ சில அதிர்ச்சியான உண்மைகளும் எளிய தீர்வுகளும் 👇

😮‍💨 மூச்சு விட சிரமப்படுகிறாயா (Breathlessness)?
➡️ மூக்கால் மட்டும் மூச்சு விடு! (Nose breathing only)

பெரும்பாலான மனிதர்கள் வாயால் மூச்சு விடுகிறார்கள். இது தவறு! மூக்கால் மூச்சு விடும்போது காற்று வடிகட்டப்படுகிறது, சூடாக்கப்படுகிறது, Nitric Oxide சுரக்கிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். நுரையீரல் வலுவடையும். தினமும் மூக்கால் மட்டும் மூச்சு விடும் பழக்கத்தை வளர்த்துக்கொள்!

🫃 வயிறு எப்போதும் பெரிதாக இருக்கிறதா (Belly fat)?
➡️ சாப்பிடும் நேரத்தை சரிசெய்! (Fix your eating window)

எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை விட எப்போது சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். காலை 8 மணிக்கு சாப்பிட தொடங்கி இரவு 8 மணிக்குள் முடி. இரவு தாமதமாக சாப்பிடுவதை நிறுத்து. இந்த ஒரு மாற்றமே வயிறு சுற்றளவை குறைக்கும்!

🧠 மூளை மழுங்கலாக இருக்கிறதா (Brain fog)?
➡️ குளிர்ந்த நீரில் குளி! (Cold shower)

வெதுவெதுப்பான நீரில் குளித்து முடிக்கும்போது 30 நொடி குளிர்ந்த நீரை விடு. இது Norepinephrine என்ற ஹார்மோனை 300% வரை அதிகரிக்கும். மூளை திடீரென விழிப்படையும். கவனிக்கும் திறன் கூடும். ஒரு கோப்பை காபியை விட இது நூறு மடங்கு சக்திவாய்ந்தது!

💔 இதயம் வேகமாக துடிக்கிறதா (Heart racing)?
➡️ இடது பக்கமாக படு! (Sleep on left side)

இரவில் இடது பக்கமாக படுத்து தூங்கு. இது இதயத்திற்கான அழுத்தத்தை குறைக்கும். செரிமானம் சீராகும். Acid reflux குறையும். நம் ஆயுர்வேதமும் இந்த வாமக்குக்சி தூக்கத்தை பல நூறு ஆண்டுகளாக பரிந்துரைக்கிறது!

🦷 பல் சொத்தையும் ஈறு பிரச்சனையும் வருகிறதா (Dental issues)?
➡️ எண்ணெய் கொப்பளி! (Oil pulling)

காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் எடு. 10 முதல் 15 நிமிடம் வாயில் சுழற்று. துப்பு. வாயில் உள்ள கிருமிகள் அழியும். ஈறு வலுவடையும். பல் வலி குறையும். இது நம் சித்தர்கள் காலத்திலிருந்து வரும் அற்புத மருத்துவம்!

👃 மூக்கு அடைப்பாக இருக்கிறதா (Blocked nose)?
➡️ மூச்சை நிறுத்தி தலையை அசை! (Breath hold + head nod)

மூச்சை உள்ளே இழுத்து பிடி. தலையை மேலும் கீழும் மெதுவாக அசை. மூச்சு தாங்காத வரை பிடி. விடு. மூக்கு 10 நொடியில் திறக்கும். இது மூக்கில் Nitric Oxide அளவை அதிகரிக்கும். எந்த மருந்தும் வேண்டாம்!

😓 அதிகமாக வியர்க்கிறதா (Excessive sweating)?
➡️ மெக்னீசியம் நிறைந்த உணவு சாப்பிடு! (Eat magnesium-rich food)

உடலில் மெக்னீசியம் குறைந்தால் நரம்பு மண்டலம் அதிக உணர்திறன் அடையும். அதிக வியர்வை, கால் பிடிப்பு, தூக்கமின்மை எல்லாம் வரும். பாதாம், வால்நட், இலை கீரைகள், வாழைப்பழம் — இவை தினமும் சாப்பிடு!

🌟 இன்றைய மிக முக்கியமான செய்தி:

உன் உடல் உனக்கு எதிரி அல்ல.
உன் உடல் உன் மிகப்பெரிய நண்பன்.

அது தினமும் உனக்காக போரிடுகிறது.
அது தினமும் உன்னை காக்கிறது.
அது தினமும் உன்னிடம் உதவி கேட்கிறது.

கொஞ்சம் கவனி. கொஞ்சம் கேள். கொஞ்சம் அன்பு செலுத்து. 🙏💛

📋 சுருக்கமாக நினைவில் வைத்துக்கொள்:

😮‍💨 மூச்சு சிரமம் → 👃 மூக்கால் மட்டும் மூச்சு விடு
🫃 வயிறு கொழுப்பு → ⏰ சாப்பிடும் நேரம் சரிசெய்
🧠 மூளை மழுங்கல் → 🚿 குளிர்ந்த நீர் குளியல்
💔 இதயம் வேகம் → 🛏️ இடது பக்கம் படு
🦷 பல் பிரச்சனை → 🥥 எண்ணெய் கொப்பளி
👃 மூக்கு அடைப்பு → 🌬️ மூச்சு நிறுத்தி தலை அசை
😓 அதிக வியர்வை → 🥜 மெக்னீசியம் உணவு

💬 இதில் உங்களுக்கு எந்த பிரச்சனை அதிகமாக வருகிறது? இந்த வழிகளை முயற்சி செய்வீர்களா? கமெண்டில் சொல்லுங்கள்! 👇

உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்றால் — Share செய்யுங்கள்! ❤️🙏

#உடல்_ரகசியங்கள் #இயற்கை_மருத்துவம் #உடல்நலம் #மனநலம் #ஆரோக்கியம் #தினசரி_ஊக்கம் #தமிழ் #Tamil #HealthTips #NaturalRemedies #Wellness #SelfCare #சித்த_மருத்துவம் #வாழ்க்கை_பாடம் #மருந்தில்லா_மருத்துவம்

Thursday, 2 April 2026

சுப ஹோரை.

உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் ஹோரை நேரம் எது தெரியுமா?

நற்காரியங்கள், புதிய முயற்சிகளைத் தொடங்குதல், மங்கல நிகழ்வுகள் போன்றவற்றைச் சுபகிரக ஹோரைகளில் ஆரம்பித்தால், நிச்சயம் நமக்குக் காரிய ஸித்தி ஏற்படும். அதேநேரம், அன்றாட வழக்கமான பணிகளுக்கும் ஹோரை வேளையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும் நீங்கலாக மற்ற ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஹோரை எனும் நேரம் பார்க்கப்படுகிறது. கிரகங்கள் நாள்தோறும் இரண்டரை நாழிகை அதாவது ஒரு மணி நேரம் ஒவ்வொரு ராசியிலும் தங்கி வலம் வரும். இதை அடிப்படையாகக் கொண்டு ஹோரை நேரம் கணிக்கப்படுகிறது. காலையில் சூரியன் உதயமாகும்போது அன்றைய தினத்தின் கிழமையே முதல் ஹோரையாகத் தொடங்கும்.

உதாரணத்துக்கு அன்று ஞாயிற்றுக்கிழமை எனில், அன்று காலை மணி 6 முதல் 7 வரை (சூரிய உதயம் காலை 6 மணி என்கிறபடிக்கு) சூரிய ஹோரை ஆகும். சூரிய ஹோரை முடிந்து... சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என முடிந்து மீண்டும் சூரியனில் இருந்து துவங்கும். திங்கட்கிழமை எனில் காலை 6 முதல் 7 மணி வரை சந்திர ஹோரை எனத் தொடங்கும்.

இந்த ஹோரைகள் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சந்திரன், புதன், சுக்கிரன், குரு ஆகியவை சுப ஹோரைகள். சூரியன், செவ்வாய், சனி ஆகியவை அசுப ஹோரைகள்.

ஒவ்வொரு ராசிக்கும் ஏற்றம் தரும் ஹோரை வேளை குறித்தும் ஜோதிட வழிகாட்டல்கள் உண்டு. அதுபற்றிய பொதுவான நியதிகளைத் தெரிந்துகொள்வோமா?

மேஷம்: இந்த ராசிக்காரர்கள் சூரியன், சந்திரன் ஆகிய ஹோரை களில் சுபகாரியங்களைச் செய்யலாம். இவற்றுக்கு அடுத்தபடியாக குரு மற்றும் சுக்ர ஹோரைகள் அதிர்ஷ்டம் தருவதாக அமையும். இவர்கள் முறையே ஞாயிறு, திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில், அந்த நாளுக்கு உரிய ஹோரை வேளையில் புதிய முயற்சிகளைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.

ரிஷபம்: இந்த ராசிக்கு சுக்ர ஹோரையும், குரு ஹோரையும், செவ்வாய் ஹோரையும் உகந்தவை. செவ்வாய், வெள்ளி, வியாழன், ஆகிய நாள்கள் சுபநாள்களாக அமைந்திருக்க, குறிப்பிட்ட ஹோரையில் சுபகாரியங்களைத் தொடங்கலாம். குறிப்பிட்ட ஹோரைகளில் இவர்கள் புதுத் தொழில் தொடங்குவது, புதுக் கிளைகள் ஆரம்பிப்பது, மற்றும் உத்தியோகம் தொடர்பான முன் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

மிதுனம்: இந்த ராசி அன்பர்களுக்குப் பொதுவாக புதன், சனி, சுக்ர ஹோரைகள் சிறப்பைத் தருபவை ஆகும். இந்த ஹோரை வேளைகளில், மங்கல காரியங்கள், வேலை சார்ந்து புதிய முயற்சிகள், புதிய முதலீடு போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

கடகம்: இந்த ராசிக்குப் பொதுவாக சந்திரன், சந்திரன், குரு சுக்கிரன் ஆகிய ஹோரைகள் மிகுந்த அனுகூலத்தைக் கொடுக்கும். இந்த ஹோரைகளில் பணப் பரிமாற்றம், வாகனம், ஆபரணங்கள் வாங்குவது, தொழில் தொடங்குவது, பணியில் சேர்வது போன்ற வற்றை மேற்கொண்டால் சுபிட்சம் பெருகும்.

சிம்மம்: இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் ஹோரைகள் சூரியன், சந்திரன் மற்றும் குரு ஹோரைகள். இந்த வேளைகளில் இவர்கள், குலதெய்வத்தை வணங்கி சுப காரியங்களைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.

கன்னி: இந்த ராசிக்குப் புதன், சுக்கிரன், சூரிய ஹோரைகள் நலன் தரும். இவை தவிர, சந்திர ஹோரையையும் பயன்படுத்தலாம். இந்த வேளைகளில் விநாயகர் மற்றும் மகாலட்சுமியை வணங்கி விட்டு, புதிய விஷயங்களில் ஈடுபடலாம்.

துலாம்: இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தரும் ஹோரைகள் செவ்வாய், சனி, குரு ஹோரைகள் ஆகும். செவ்வாய் மற்றும் சனி ஹோரையில் தளவாட உற்பத்தி, தொழிற்சாலை தொடங்குதலைச் செய்யலாம். குரு ஓரையில் ஆபரணங்கள் வாங்கலாம். மற்றபடி குரு ஹோரையில் புதுத் தொழில் தொடங்குதல், பத்திரப் பதிவு செய்தல் போன்ற முக்கியமான காரியங்களையும் செய்யலாம்.

விருச்சிகம்: இவர்களுக்குச் செவ்வாய், சனி, சுக்கிர ஹோரைகள் அதிர்ஷ்டம் தரும். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் சுக்ர ஹோரை வேளையில் மகாலட்சுமியை மனதார வணங்கிவிட்டு, புதிய முயற்சிகளில் இறங்கலாம். வீடு-மனை, வாகனம் வாங்குதல் நகை வாங்குதல் போன்றவற்றில் ஈடுபடலாம். இதனால் சுபிட்சம் பன் மடங்கு அதிகரிக்கும்.

தனுசு: குரு, சுக்கிரன், சூரிய ஹோரைகள் சிறப்பு சேர்க்கும். குறிப்பாக குரு ஹோரையில் பண பரிவர்த்தனை, புதிய ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகளைச் செய்வது சிறப்பு. சுக்ர ஹோரையில் சுபமங்கல காரியங்களை மேற்கொள்ளலாம்.

மகரம்: இந்த ராசியினருக்கு இவர்கள் பெரும்பாலும் வெள்ளிக் கிழமைகளில் சுக்கிர ஓரைக் காலத்தில் சுபகாரியங்களைத் தொழில் நிமித்தமான பணிகளில் ஈடுபட்டால், நல்ல விளைவுகள் உண்டு. குறிப்பாக திருவோண நட்சத்திரக் காரர்களுக்குச் சந்திர ஓரையும் அவிட்டம் அன்பர்களுக்குச் சனி ஓரையும் விசேஷ பலன்களைத் தரும்.

கும்பம்: இவர்களுக்குப் புதன், சனி, குரு ஹோரைகள் சிறப்பு. வளர்பிறை காலங்களில் சந்திர ஹோரையும் நன்மை அளிக்கும். இந்த ஹோரை வேளைகளில் புதிய ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல், வேலைக்கான விண்ணப்பம் போடுவது முதலானவற்றை மேற்கொள்ளலாம். வீடு-மனை வாங்குவது விற்பது, தொழில் தொடர்பான முன்னேற்பாடுகளையும் செய்யலாம்.

மீனம்: சந்திரன், புதன் மற்றும் சுக்ர ஹோரை சிறப்புச் சேர்க்கும். இந்த ஹோரைகளில் புதுத் தொழில் தொடங்குவதற்கான அரசு அனுமதி கோருதல், வேலை மற்றும் படிப்புக்கான விண்ணப்பம் அளித்தல், முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தல் போன்ற அதிமுக்கிய விஷயங்களை மேற்காணும் ஓரைகளில் செய்வது சிறப்பு.

SAKTHI VIKATAN

Saturday, 21 February 2026

கவிதை- பால் கனகராஜ் சாருக்கு...

ஏழ்மையின் எளிய குடிலில் பிறந்த இளம் விடியல்,

ஊரின் மண்ணில் வளர்ந்தது ஓர் உறுதியான விழியல்.

அரசுப் பள்ளி வாசலில் கனவுகள் விதைத்தாா்,

அவமானம் கல்லாய் விழுந்தாலும் எழுந்து நின்றாா்.

வறுமை காற்றில் துடித்தாலும் மனம் தளரவில்லை,

வழியின்றி நின்ற போதும் நம்பிக்கை வாடவில்லை.

சட்டத்தின் செம்மைப் பாதை நோக்கி பயணம் செய்தாா்,

சிறிய நீதிமன்றத்தில்கூட முதல் உயர்நீதியில் நிலைநின்றாா்.

Madras High Court மண்டபத்தில் ஜூனியராக தன்னை செம்மையாக்கி,

அறிவால் ஆயுதம் பூண்டு நீதியின் விளக்கேற்றினாா்.

பின்னர் வழக்கறிஞர் உலகில் முன்னணியில் உயர்ந்து,
தமிழ்நாடு–புதுச்சேரி பார் கவுன்சிலின் தலைமை ஏந்தினாா்.

Bar Council of Tamil Nadu and Puducherry மேடையில் மரியாதை பெற்றாா்.

சட்டத்தின் சீர்மையை காக்கும் சின்னமாக மாறினாா்.

இன்று Bharatiya Janata Party மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராக உயா்ந்து
மக்கள் நம்பிக்கையின் நட்சத்திரமாக ஜொலிக்கின்றார்.

தர்மம் செய்பவர், தாழ்மையால் உயர்ந்தவர்,
தன்னை சார்ந்தோர் நெஞ்சில் நித்தம் நிலைத்தவர்.

திரு. பால் கனகராஜ் ஐயா அவர்களே —
உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறோம் நாங்கள்.

உங்கள் வாழ்வு எங்கள் ஊக்கமாம்,

உங்கள் உயர்வு எங்கள் நம்பிக்கையாம்.

என்றும் உங்களால் வழி பெற்றோா் சங்கம்.

கவிதை- மணி அண்ணனுக்கு வாழ்த்துரை

மனமார்ந்த வாழ்த்துக்கள் 
மணி அண்ணா…!
எங்கள் மணிவண்ணா…!
எங்கள் அணி மன்னா…!

உன் முயற்சி மலைகளையும் மடக்கிடும் வல்லமை அண்ணா...!

உன் வழிகாட்டுதல் எங்களுக்கு ஒளிவிளக்காய் நிலைநிற்கும் நிலமை அண்ணா...!

வெற்றி உன் நடைபாதையில் மலா்ப்போா்வையாய் விரிகிறது அண்ணா...!

புலமை உன் சொற்களில் தீபமாக ஜொலிக்கிறது அண்ணா...!

நாம் நம்பும் நாவலா் நீயே அண்ணா,
உன் சாதனைச் சிகரம் மேலும் மேலும் உயரட்டும் அண்ணா...!

உன் பெயர் புகழின் பறவையாக எங்கும் பறக்கட்டும் அண்ணா...!
💐💐💐

அன்புடன்...
சங்க கவிஞா். க.இளங்கோவன்.

Thursday, 12 February 2026

முதுமை ஓர் வரம் கவிதை

*முதுமை ஓர் வரம்*

வாழ்க்கையின் வெள்ளி வெளிச்சம் அது!

அனுபவம் சேர்த்த பொக்கிஷம் அது!

ஆண்டுகள் தந்த பரிசும் அது!

சிரிப்பிலும், சோகத்திலும் செதுக்கப்பட்ட ஞானம் அது!

சிறு கதைகளில் நிறைந்திருக்கும் பெரிய பாடம் அது!

நரை முடியில் நம்பிக்கையின் நீள நிழல் அது!

நடந்த பாதையில் நினைவுகள் பூத்த மலர் அது!

பிள்ளைகளின் சிரிப்பில் புதுப் பிறவி காணும்,
பெருமிதம் தரும் பாசத்தின் பெரு நீரோடை அது!

உயிர் கற்றுக் கொடுத்த அமைதியின் அர்த்தம் அது!

முதுமை என்றுமே மனிதனுக்கு மகத்தான வரமே என்பது இந்த முதியவனின் கருத்தும் அதுவே....!!!

Tuesday, 28 January 2025

சர்க்கரை வியாதி புண்ணுக்கு ஆவாரம்பூ மருத்துவம்

சர்க்கரை வியாதி என்று உங்களை ஏமாற்றியவன் இறுதியில் உங்கள் விரல் அல்லது காலை எடுக்க சொல்வான்😡

அவர்களுக்காக ஒரு பதிவு! 

விரலை வெட்ட வேண்டாம்:👌

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.🌷

மேலும் விபரங்கள் கீழே.!
👇👇👇👇👇👇👇👇👇👇

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு 
மருத்துவாிடம் சென்றால்,

சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும், 

காலில் இருந்தால் 
காலை துண்டித்து விடுவதும், 

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது, 

எனக்கு தெரிந்தவரின் காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள், 

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.🏨

இதற்கு கண்கண்ட மருந்து👀

ஆவாரம்_இலை 🌿🌿🌿🌿🌿🌿🌿

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிர்ந்தால் பலரின் 
கால்களையும் விரல்களையும் காப்பாற்றுவோம்.! 
படித்தேன்...பகிர்ந்தேன்..🧡