Thursday, 2 April 2026

சுப ஹோரை.

உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் ஹோரை நேரம் எது தெரியுமா?

நற்காரியங்கள், புதிய முயற்சிகளைத் தொடங்குதல், மங்கல நிகழ்வுகள் போன்றவற்றைச் சுபகிரக ஹோரைகளில் ஆரம்பித்தால், நிச்சயம் நமக்குக் காரிய ஸித்தி ஏற்படும். அதேநேரம், அன்றாட வழக்கமான பணிகளுக்கும் ஹோரை வேளையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும் நீங்கலாக மற்ற ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஹோரை எனும் நேரம் பார்க்கப்படுகிறது. கிரகங்கள் நாள்தோறும் இரண்டரை நாழிகை அதாவது ஒரு மணி நேரம் ஒவ்வொரு ராசியிலும் தங்கி வலம் வரும். இதை அடிப்படையாகக் கொண்டு ஹோரை நேரம் கணிக்கப்படுகிறது. காலையில் சூரியன் உதயமாகும்போது அன்றைய தினத்தின் கிழமையே முதல் ஹோரையாகத் தொடங்கும்.

உதாரணத்துக்கு அன்று ஞாயிற்றுக்கிழமை எனில், அன்று காலை மணி 6 முதல் 7 வரை (சூரிய உதயம் காலை 6 மணி என்கிறபடிக்கு) சூரிய ஹோரை ஆகும். சூரிய ஹோரை முடிந்து... சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என முடிந்து மீண்டும் சூரியனில் இருந்து துவங்கும். திங்கட்கிழமை எனில் காலை 6 முதல் 7 மணி வரை சந்திர ஹோரை எனத் தொடங்கும்.

இந்த ஹோரைகள் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சந்திரன், புதன், சுக்கிரன், குரு ஆகியவை சுப ஹோரைகள். சூரியன், செவ்வாய், சனி ஆகியவை அசுப ஹோரைகள்.

ஒவ்வொரு ராசிக்கும் ஏற்றம் தரும் ஹோரை வேளை குறித்தும் ஜோதிட வழிகாட்டல்கள் உண்டு. அதுபற்றிய பொதுவான நியதிகளைத் தெரிந்துகொள்வோமா?

மேஷம்: இந்த ராசிக்காரர்கள் சூரியன், சந்திரன் ஆகிய ஹோரை களில் சுபகாரியங்களைச் செய்யலாம். இவற்றுக்கு அடுத்தபடியாக குரு மற்றும் சுக்ர ஹோரைகள் அதிர்ஷ்டம் தருவதாக அமையும். இவர்கள் முறையே ஞாயிறு, திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில், அந்த நாளுக்கு உரிய ஹோரை வேளையில் புதிய முயற்சிகளைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.

ரிஷபம்: இந்த ராசிக்கு சுக்ர ஹோரையும், குரு ஹோரையும், செவ்வாய் ஹோரையும் உகந்தவை. செவ்வாய், வெள்ளி, வியாழன், ஆகிய நாள்கள் சுபநாள்களாக அமைந்திருக்க, குறிப்பிட்ட ஹோரையில் சுபகாரியங்களைத் தொடங்கலாம். குறிப்பிட்ட ஹோரைகளில் இவர்கள் புதுத் தொழில் தொடங்குவது, புதுக் கிளைகள் ஆரம்பிப்பது, மற்றும் உத்தியோகம் தொடர்பான முன் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

மிதுனம்: இந்த ராசி அன்பர்களுக்குப் பொதுவாக புதன், சனி, சுக்ர ஹோரைகள் சிறப்பைத் தருபவை ஆகும். இந்த ஹோரை வேளைகளில், மங்கல காரியங்கள், வேலை சார்ந்து புதிய முயற்சிகள், புதிய முதலீடு போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

கடகம்: இந்த ராசிக்குப் பொதுவாக சந்திரன், சந்திரன், குரு சுக்கிரன் ஆகிய ஹோரைகள் மிகுந்த அனுகூலத்தைக் கொடுக்கும். இந்த ஹோரைகளில் பணப் பரிமாற்றம், வாகனம், ஆபரணங்கள் வாங்குவது, தொழில் தொடங்குவது, பணியில் சேர்வது போன்ற வற்றை மேற்கொண்டால் சுபிட்சம் பெருகும்.

சிம்மம்: இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் ஹோரைகள் சூரியன், சந்திரன் மற்றும் குரு ஹோரைகள். இந்த வேளைகளில் இவர்கள், குலதெய்வத்தை வணங்கி சுப காரியங்களைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.

கன்னி: இந்த ராசிக்குப் புதன், சுக்கிரன், சூரிய ஹோரைகள் நலன் தரும். இவை தவிர, சந்திர ஹோரையையும் பயன்படுத்தலாம். இந்த வேளைகளில் விநாயகர் மற்றும் மகாலட்சுமியை வணங்கி விட்டு, புதிய விஷயங்களில் ஈடுபடலாம்.

துலாம்: இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தரும் ஹோரைகள் செவ்வாய், சனி, குரு ஹோரைகள் ஆகும். செவ்வாய் மற்றும் சனி ஹோரையில் தளவாட உற்பத்தி, தொழிற்சாலை தொடங்குதலைச் செய்யலாம். குரு ஓரையில் ஆபரணங்கள் வாங்கலாம். மற்றபடி குரு ஹோரையில் புதுத் தொழில் தொடங்குதல், பத்திரப் பதிவு செய்தல் போன்ற முக்கியமான காரியங்களையும் செய்யலாம்.

விருச்சிகம்: இவர்களுக்குச் செவ்வாய், சனி, சுக்கிர ஹோரைகள் அதிர்ஷ்டம் தரும். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் சுக்ர ஹோரை வேளையில் மகாலட்சுமியை மனதார வணங்கிவிட்டு, புதிய முயற்சிகளில் இறங்கலாம். வீடு-மனை, வாகனம் வாங்குதல் நகை வாங்குதல் போன்றவற்றில் ஈடுபடலாம். இதனால் சுபிட்சம் பன் மடங்கு அதிகரிக்கும்.

தனுசு: குரு, சுக்கிரன், சூரிய ஹோரைகள் சிறப்பு சேர்க்கும். குறிப்பாக குரு ஹோரையில் பண பரிவர்த்தனை, புதிய ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகளைச் செய்வது சிறப்பு. சுக்ர ஹோரையில் சுபமங்கல காரியங்களை மேற்கொள்ளலாம்.

மகரம்: இந்த ராசியினருக்கு இவர்கள் பெரும்பாலும் வெள்ளிக் கிழமைகளில் சுக்கிர ஓரைக் காலத்தில் சுபகாரியங்களைத் தொழில் நிமித்தமான பணிகளில் ஈடுபட்டால், நல்ல விளைவுகள் உண்டு. குறிப்பாக திருவோண நட்சத்திரக் காரர்களுக்குச் சந்திர ஓரையும் அவிட்டம் அன்பர்களுக்குச் சனி ஓரையும் விசேஷ பலன்களைத் தரும்.

கும்பம்: இவர்களுக்குப் புதன், சனி, குரு ஹோரைகள் சிறப்பு. வளர்பிறை காலங்களில் சந்திர ஹோரையும் நன்மை அளிக்கும். இந்த ஹோரை வேளைகளில் புதிய ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல், வேலைக்கான விண்ணப்பம் போடுவது முதலானவற்றை மேற்கொள்ளலாம். வீடு-மனை வாங்குவது விற்பது, தொழில் தொடர்பான முன்னேற்பாடுகளையும் செய்யலாம்.

மீனம்: சந்திரன், புதன் மற்றும் சுக்ர ஹோரை சிறப்புச் சேர்க்கும். இந்த ஹோரைகளில் புதுத் தொழில் தொடங்குவதற்கான அரசு அனுமதி கோருதல், வேலை மற்றும் படிப்புக்கான விண்ணப்பம் அளித்தல், முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தல் போன்ற அதிமுக்கிய விஷயங்களை மேற்காணும் ஓரைகளில் செய்வது சிறப்பு.

SAKTHI VIKATAN

Saturday, 21 February 2026

கவிதை- பால் கனகராஜ் சாருக்கு...

ஏழ்மையின் எளிய குடிலில் பிறந்த இளம் விடியல்,

ஊரின் மண்ணில் வளர்ந்தது ஓர் உறுதியான விழியல்.

அரசுப் பள்ளி வாசலில் கனவுகள் விதைத்தாா்,

அவமானம் கல்லாய் விழுந்தாலும் எழுந்து நின்றாா்.

வறுமை காற்றில் துடித்தாலும் மனம் தளரவில்லை,

வழியின்றி நின்ற போதும் நம்பிக்கை வாடவில்லை.

சட்டத்தின் செம்மைப் பாதை நோக்கி பயணம் செய்தாா்,

சிறிய நீதிமன்றத்தில்கூட முதல் உயர்நீதியில் நிலைநின்றாா்.

Madras High Court மண்டபத்தில் ஜூனியராக தன்னை செம்மையாக்கி,

அறிவால் ஆயுதம் பூண்டு நீதியின் விளக்கேற்றினாா்.

பின்னர் வழக்கறிஞர் உலகில் முன்னணியில் உயர்ந்து,
தமிழ்நாடு–புதுச்சேரி பார் கவுன்சிலின் தலைமை ஏந்தினாா்.

Bar Council of Tamil Nadu and Puducherry மேடையில் மரியாதை பெற்றாா்.

சட்டத்தின் சீர்மையை காக்கும் சின்னமாக மாறினாா்.

இன்று Bharatiya Janata Party மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராக உயா்ந்து
மக்கள் நம்பிக்கையின் நட்சத்திரமாக ஜொலிக்கின்றார்.

தர்மம் செய்பவர், தாழ்மையால் உயர்ந்தவர்,
தன்னை சார்ந்தோர் நெஞ்சில் நித்தம் நிலைத்தவர்.

திரு. பால் கனகராஜ் ஐயா அவர்களே —
உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறோம் நாங்கள்.

உங்கள் வாழ்வு எங்கள் ஊக்கமாம்,

உங்கள் உயர்வு எங்கள் நம்பிக்கையாம்.

என்றும் உங்களால் வழி பெற்றோா் சங்கம்.

கவிதை- மணி அண்ணனுக்கு வாழ்த்துரை

மனமார்ந்த வாழ்த்துக்கள் 
மணி அண்ணா…!
எங்கள் மணிவண்ணா…!
எங்கள் அணி மன்னா…!

உன் முயற்சி மலைகளையும் மடக்கிடும் வல்லமை அண்ணா...!

உன் வழிகாட்டுதல் எங்களுக்கு ஒளிவிளக்காய் நிலைநிற்கும் நிலமை அண்ணா...!

வெற்றி உன் நடைபாதையில் மலா்ப்போா்வையாய் விரிகிறது அண்ணா...!

புலமை உன் சொற்களில் தீபமாக ஜொலிக்கிறது அண்ணா...!

நாம் நம்பும் நாவலா் நீயே அண்ணா,
உன் சாதனைச் சிகரம் மேலும் மேலும் உயரட்டும் அண்ணா...!

உன் பெயர் புகழின் பறவையாக எங்கும் பறக்கட்டும் அண்ணா...!
💐💐💐

அன்புடன்...
சங்க கவிஞா். க.இளங்கோவன்.

Thursday, 12 February 2026

முதுமை ஓர் வரம் கவிதை

*முதுமை ஓர் வரம்*

வாழ்க்கையின் வெள்ளி வெளிச்சம் அது!

அனுபவம் சேர்த்த பொக்கிஷம் அது!

ஆண்டுகள் தந்த பரிசும் அது!

சிரிப்பிலும், சோகத்திலும் செதுக்கப்பட்ட ஞானம் அது!

சிறு கதைகளில் நிறைந்திருக்கும் பெரிய பாடம் அது!

நரை முடியில் நம்பிக்கையின் நீள நிழல் அது!

நடந்த பாதையில் நினைவுகள் பூத்த மலர் அது!

பிள்ளைகளின் சிரிப்பில் புதுப் பிறவி காணும்,
பெருமிதம் தரும் பாசத்தின் பெரு நீரோடை அது!

உயிர் கற்றுக் கொடுத்த அமைதியின் அர்த்தம் அது!

முதுமை என்றுமே மனிதனுக்கு மகத்தான வரமே என்பது இந்த முதியவனின் கருத்தும் அதுவே....!!!

Tuesday, 28 January 2025

சர்க்கரை வியாதி புண்ணுக்கு ஆவாரம்பூ மருத்துவம்

சர்க்கரை வியாதி என்று உங்களை ஏமாற்றியவன் இறுதியில் உங்கள் விரல் அல்லது காலை எடுக்க சொல்வான்😡

அவர்களுக்காக ஒரு பதிவு! 

விரலை வெட்ட வேண்டாம்:👌

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.🌷

மேலும் விபரங்கள் கீழே.!
👇👇👇👇👇👇👇👇👇👇

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு 
மருத்துவாிடம் சென்றால்,

சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும், 

காலில் இருந்தால் 
காலை துண்டித்து விடுவதும், 

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது, 

எனக்கு தெரிந்தவரின் காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள், 

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.🏨

இதற்கு கண்கண்ட மருந்து👀

ஆவாரம்_இலை 🌿🌿🌿🌿🌿🌿🌿

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிர்ந்தால் பலரின் 
கால்களையும் விரல்களையும் காப்பாற்றுவோம்.! 
படித்தேன்...பகிர்ந்தேன்..🧡

Friday, 24 January 2025

நில அளவு FMB

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது ..
பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
 குறிப்பாக நிலவரைபடம்   FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை 
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது
 எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் 
FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..

 சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள் 
****************************************
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. 
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். 
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*****************
1 சென்ட்      – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர்       – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர்       – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட்      – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ்    – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி           – 144 சதுர அடி
1 சென்ட்      – 3 குழி
3 மா              – 1 ஏக்க‍ர்
3 குழி           – 435.6 சதுர அடி
1 மா              – 100 குழி
1 ஏக்க‍ர்       – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி     = ஒரு மா
20 மா        = ஒரு வேலி
3.5 மா       = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர்  = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம்        = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம்     = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

•             10 கோண் = 1 நுண்ணணு

•             10 நுண்ணணு = 1 அணு

•             8 அணு = 1 கதிர்த்துகள்

•             8 கதிர்த்துகள் = 1 துசும்பு

•             8 துசும்பு = 1 மயிர்நுனி

•             8 மயிர்நுனி = 1 நுண்மணல்

•             8 நுண்மணல் = 1 சிறு கடுகு

•             8 சிறு கடுகு = 1 எள்

•             8 எள் = 1 நெல்

•             8 நெல் = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம்

•             6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

•             4 காதம் = 1 யோசனை

•             வழியளவை

•             8 தோரை(நெல்) = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

•             2000 தண்டம் = 1 குரோசம்        21/4மைல்

•             4 குரோசம் = 1 யோசனை

•             71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை 

100 ச.மீ                              - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ்                          - 1 ஹெக்டேர் 

1 ச.மீ                                  - 10 .764 ச அடி

2400 ச.அடி                       - 1 மனை 

24 மனை                         - 1 காணி

1 காணி                            - 1 .32 ஏக்கர் 

144 ச.அங்குலம்            - 1 சதுர அடி 

435 . 6 சதுர அடி          - 1 சென்ட் 

1000 ச லிங்க்ஸ்         -  1 சென்ட் 

100 சென்ட்                     - 1  ஏக்கர் 

1லட்சம்ச.லிங்க்ஸ்   - 1  ஏக்கர் 

2 .47   ஏக்கர்                    - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர்               = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர்                             = 4840 குழி (Square Yard)

100 சென்ட்                     = 4840 சதுர குழிகள் 

1 சென்ட்                          = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர்                             = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர்                             = 43560 சதுர அடி
எனக்கு பகிர்ந்தவர்க்கு நன்றி