Monday, 14 September 2026

TGNA.HISTORY

*தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்*

*Tamil Nadu Government Nurses’ Association – Government Recognised*

*வரலாற்றுக் குறிப்பு – 1920–2026*

தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, அன்றைய *Madras Presidency* காலத்தில் அரசு செவிலியர்களின் நலன், பணிச்சூழல் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட ஒரு பழமையான செவிலியர் அமைப்பாகும்.

சங்கம் ஆரம்பகாலத்தில் *“Madras Government Nurses Association”* என்ற பெயரில் செயல்பட்டது.

பதிவு விவரம்

- பதிவு செய்யப்பட்ட ஆண்டு: *1920–21*
- *Registration No.: 5 / 1920–21*
- பதிவு செய்யப்பட்ட அமைப்பு: *Madras Presidency*
- இது சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலேயே பதிவு செய்யப்பட்ட அரசு செவிலியர் சங்கமாகும்.

அரசு அங்கீகாரம்

தமிழ்நாடு அரசு இந்தச் சங்கத்திற்கு *G.O. No. 716, P&AR Department, dated 12.12.1961* மூலம் அரசு அங்கீகாரம் வழங்கியதாக சங்கத்தின் வரலாற்றுத் தகவல்களிலும், நீதிமன்ற ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது

பின்னர் சங்கத்தின் பெயர் *“Tamil Nadu Nurses Government Association”* என மாற்றப்பட்டு, தற்போது *“Tamil Nadu Government Nurses’ Association – Government Recognised”* என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

*சங்கத்தின் முக்கிய நோக்கம்*

அரசு செவிலியர்களின்:

- பணிநிலை மற்றும் பணிச்சூழல் மேம்பாடு
- சேவை உரிமைகள் மற்றும் நலன்கள்
- ஊதியம் மற்றும் பதவி உயர்வு தொடர்பான கோரிக்கைகள்
- பணிச்சுமை மற்றும் பணியிடப் பிரச்சினைகள்
- செவிலியர் தொழிலின் கண்ணியம் மற்றும் அங்கீகாரம்

ஆகியவற்றிற்காக தொடர்ந்து குரல் கொடுப்பதே சங்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.

1920–21 முதல் 2026 வரை – ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியத்துடன், தமிழ்நாடு அரசு செவிலியர்களின் உரிமை மற்றும் நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் அமைப்பாக தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் திகழ்கிறது.