*முதுமை ஓர் வரம்*
வாழ்க்கையின் வெள்ளி வெளிச்சம் அது!
அனுபவம் சேர்த்த பொக்கிஷம் அது!
ஆண்டுகள் தந்த பரிசும் அது!
சிரிப்பிலும், சோகத்திலும் செதுக்கப்பட்ட ஞானம் அது!
சிறு கதைகளில் நிறைந்திருக்கும் பெரிய பாடம் அது!
நரை முடியில் நம்பிக்கையின் நீள நிழல் அது!
நடந்த பாதையில் நினைவுகள் பூத்த மலர் அது!
பிள்ளைகளின் சிரிப்பில் புதுப் பிறவி காணும்,
பெருமிதம் தரும் பாசத்தின் பெரு நீரோடை அது!
உயிர் கற்றுக் கொடுத்த அமைதியின் அர்த்தம் அது!
முதுமை என்றுமே மனிதனுக்கு மகத்தான வரமே என்பது இந்த முதியவனின் கருத்தும் அதுவே....!!!