Saturday, 21 February 2026

கவிதை- பால் கனகராஜ் சாருக்கு...

ஏழ்மையின் எளிய குடிலில் பிறந்த இளம் விடியல்,

ஊரின் மண்ணில் வளர்ந்தது ஓர் உறுதியான விழியல்.

அரசுப் பள்ளி வாசலில் கனவுகள் விதைத்தாா்,

அவமானம் கல்லாய் விழுந்தாலும் எழுந்து நின்றாா்.

வறுமை காற்றில் துடித்தாலும் மனம் தளரவில்லை,

வழியின்றி நின்ற போதும் நம்பிக்கை வாடவில்லை.

சட்டத்தின் செம்மைப் பாதை நோக்கி பயணம் செய்தாா்,

சிறிய நீதிமன்றத்தில்கூட முதல் உயர்நீதியில் நிலைநின்றாா்.

Madras High Court மண்டபத்தில் ஜூனியராக தன்னை செம்மையாக்கி,

அறிவால் ஆயுதம் பூண்டு நீதியின் விளக்கேற்றினாா்.

பின்னர் வழக்கறிஞர் உலகில் முன்னணியில் உயர்ந்து,
தமிழ்நாடு–புதுச்சேரி பார் கவுன்சிலின் தலைமை ஏந்தினாா்.

Bar Council of Tamil Nadu and Puducherry மேடையில் மரியாதை பெற்றாா்.

சட்டத்தின் சீர்மையை காக்கும் சின்னமாக மாறினாா்.

இன்று Bharatiya Janata Party மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராக உயா்ந்து
மக்கள் நம்பிக்கையின் நட்சத்திரமாக ஜொலிக்கின்றார்.

தர்மம் செய்பவர், தாழ்மையால் உயர்ந்தவர்,
தன்னை சார்ந்தோர் நெஞ்சில் நித்தம் நிலைத்தவர்.

திரு. பால் கனகராஜ் ஐயா அவர்களே —
உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறோம் நாங்கள்.

உங்கள் வாழ்வு எங்கள் ஊக்கமாம்,

உங்கள் உயர்வு எங்கள் நம்பிக்கையாம்.

என்றும் உங்களால் வழி பெற்றோா் சங்கம்.

கவிதை- மணி அண்ணனுக்கு வாழ்த்துரை

மனமார்ந்த வாழ்த்துக்கள் 
மணி அண்ணா…!
எங்கள் மணிவண்ணா…!
எங்கள் அணி மன்னா…!

உன் முயற்சி மலைகளையும் மடக்கிடும் வல்லமை அண்ணா...!

உன் வழிகாட்டுதல் எங்களுக்கு ஒளிவிளக்காய் நிலைநிற்கும் நிலமை அண்ணா...!

வெற்றி உன் நடைபாதையில் மலா்ப்போா்வையாய் விரிகிறது அண்ணா...!

புலமை உன் சொற்களில் தீபமாக ஜொலிக்கிறது அண்ணா...!

நாம் நம்பும் நாவலா் நீயே அண்ணா,
உன் சாதனைச் சிகரம் மேலும் மேலும் உயரட்டும் அண்ணா...!

உன் பெயர் புகழின் பறவையாக எங்கும் பறக்கட்டும் அண்ணா...!
💐💐💐

அன்புடன்...
சங்க கவிஞா். க.இளங்கோவன்.

Thursday, 12 February 2026

முதுமை ஓர் வரம் கவிதை

*முதுமை ஓர் வரம்*

வாழ்க்கையின் வெள்ளி வெளிச்சம் அது!

அனுபவம் சேர்த்த பொக்கிஷம் அது!

ஆண்டுகள் தந்த பரிசும் அது!

சிரிப்பிலும், சோகத்திலும் செதுக்கப்பட்ட ஞானம் அது!

சிறு கதைகளில் நிறைந்திருக்கும் பெரிய பாடம் அது!

நரை முடியில் நம்பிக்கையின் நீள நிழல் அது!

நடந்த பாதையில் நினைவுகள் பூத்த மலர் அது!

பிள்ளைகளின் சிரிப்பில் புதுப் பிறவி காணும்,
பெருமிதம் தரும் பாசத்தின் பெரு நீரோடை அது!

உயிர் கற்றுக் கொடுத்த அமைதியின் அர்த்தம் அது!

முதுமை என்றுமே மனிதனுக்கு மகத்தான வரமே என்பது இந்த முதியவனின் கருத்தும் அதுவே....!!!